வாழக்கொடுத்த வழி

சி.ஜெயசங்கர்

எழுத முடியாத கவிதைகள்
இரைந்தெழுந்த பேரலைகள்
நெஞ்சக் கனகடலில் சுழன்டிக்க

முகங்கள் சலனமற்றுச் சாந்தமாய்
கண்கள் சிவப்பேறாப் பளிங்குகளாய்
வார்த்தைகள் கொதிப்பற்று
துயரற்று
எதுவுமே அற்று

அசாதாரணங்களை உள்ளமிழ்த்தி
சாதாரணமாய்
வெகு சாதாரணமாய்
பொய்யுக்கும் புரட்டுக்கும்
தாளமிட்டு வாழக்கொடுத்த வழி
என்செய்வோம் சொல்
0
முழு உள்ளடக்கம்

0 comments:

Post a Comment